மன அழுத்தத்தினால் தன் கழுத்தை தானே அறுத்த இளைஞன்
ஹட்டன் பொகவந்தலாவை பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை காலை இளைஞர் ஒருவர் தனது கழுத்து பகுதியை தாமே வெட்டிக்கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன அழுத்தத்தால் குறித்த இளைஞர் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தில் தன்னுடைய கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் இரத்தப்போக்குடன் குறித்த இளைஞர் கீழே வீழ்ந்துக்கிடந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்