மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதி திறந்து வைப்பு
-மன்னார் நிருபர்-
மன்னார் வங்காலை பொலிஸ் நிலையத்தின் சுற்றுலா விடுதியை நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன் போது பொலிஸ்மா அதிபருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் போது வடமாகாண பொலிஸ் மா அதிபர்,வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் என பலர் இதன் போது கலந்து கொண்டனர்.




