மன்னார் புகையிரத வீதியில் தமிழரசுக் கட்சியின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு
-மன்னார் நிருபர்-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை புதிய அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் ப.ஜே.குமார் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் மன்னார்-புகையிரத வீதி பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் , இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள்,கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளுராச்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




