மன்னார் – நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி- மாளிகைப்பிட்டி கிராம உள்ளக வீதி புனரமைப்பு
-மன்னார் நிருபர்-
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி மாளிகைப்பிட்டி கிராம உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்த வீதி யானது 800 மீட்டர் நீளம் கொண்ட வீதியாகும். வீதிக்கு 31.7 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப் பட்டு பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வீதி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாட்டான் பிரதேச சபை தவிசாளர் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் ,நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது





