மனைவியை கொன்று 70 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பொறியியலாளர்
மனைவியை கொன்று 70 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசிய பொறியியலாளர் ஒருவருக்கு டெல்லி-டேராடூன் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை ஆயுள் தண்டனையும், 150,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ். ஐ.டி பொறியியலாளரான இவர், 1999ல் தனது காதலியான அனுபமா குலாட்டியை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
அப்போது கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே, அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர்.
நாடு திரும்பியது ராஜேஷ் கொல்கத்தாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இதனால், கணவன் மனைவியிடையே தொடர்ந்து தகராறு நீடித்து வந்தது.
இந்நிலையில், அனுபமாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். இதனால் குடும்பச் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதையடுத்து, தன்னை ராஜேஷ் ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக அனுபமா பொலிஸில் புகார் அளித்தார்.
மேலும், மாதம் 20,000 ரூபாய் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். எனவே, மனைவியை தீர்த்துக்கட்ட ராஜேஷ் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் மனைவியை கீழே தள்ளினார். அனுபமா மயங்கி விழுந்தார்.
ஆனால் அவர் இறக்கவில்லை, மயக்கமடைந்தார் என்பதை அறிந்த ராஜேஷ், உடனடியாக அவரது மூக்கிலும் வாயிலும் அடித்தார். மூச்சுத் திணறி சிறிது நேரத்தில் அனுபமா உயிரிழந்தார்.
மனைவியின் உடலை எங்கு மறைப்பது என்று ராஜேஷ் யோசிக்கிறார். பின்னர் அவர் தனது மனைவியின் உடலை 70 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து இரண்டு மாதங்களாக நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார்.
இந்நிலையில், தயார் குறித்து குழந்தைகள் கேட்டதும், ராஜேஷ் பலவிதமாக பொய் சொல்லி சமாளித்தார்.
இதுகுறித்து அனுபமாவின் சகோதரர் சுஜன்குமார் டேராடூன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொலிஸார் ராஜேஷ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் பொலிஸார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தபோது, மனித உடலின் ஒரு பகுதி பிளாஸ்டிக் பையில் உள்ளே இருந்து எடுக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த பொலிஸார் ராஜேஷிடம் விசாரித்ததில் ராஜேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ராஜேஷ், ஒரு கல் வெட்டும் கிரைண்டர், ஒரு உறைவிப்பான் மற்றும் ஒரு பிளாஸ்டிக் பையை உள்ளூர் கடையில் வாங்கியதாக தெரிவித்தார்.
அவர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராஜேஷுக்கு டேராடூன் நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 150,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.