மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  மத்திய மாகாணத்திலுள்ள  அனைத்து  தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக  மத்திய மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்திற்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை கற்றல் செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.