
மதுபான விலை தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு விலை அதிகரிப்புடன் இலங்கையில் மது பாவனை குறைந்துள்ளதுடன் இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 30 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மதுபானங்களின் விலையை குறைக்க அரசு தயாராக உள்ளது என்பதை கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பார்த்தேன். ஆனால், எம்மால் மதுபானங்களின் விலையை குறைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்