மதுபான விலை குறைப்பு?

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பொருட்களின் விலை குறைவடைய வேண்டும் எல்லாவற்றினதும் விலைகள் குறைக்க வேண்டும் முக்கியமாக மதுபானத்தின் விலையை ஆண்டு இறுதிக்குள் குறைக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் இவ்வளவு காலமாக பிரபலமான தீர்மானங்கள் எடுக்கவில்லை இனி எடுக்கப்போவதும் இல்லை அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கச்சென்றதால் தான் டொலர் 200 ரூபாவிற்கு வீழ்ச்சியடைந்தது“ என தெரிவித்துள்ளார்.