மதுபான விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வேலணை 6ம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட, 68வயது மதிக்கதக்க  மூதாட்டி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த மூதாட்டியின் வீட்டில் இருந்து 750 மில்லி லீற்றர் 4 போத்தல்கள், 180 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 12 போத்தல்கள் கைபெற்றப்பட்டது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.