மதுக்கடைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்க வேண்டும் : டயானா

சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் மதுபான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இலங்கை 24 மணி நேரமும் திறந்திருக்கும்” நாடாக மாற்றப்பட வேண்டும்” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான நிலையங்கள இரவு 10.30 மணிக்குள் மூடினால் சுற்றுலாத் துறையை வளர்க்க முடியாது. எங்களிடம் இரவு பொருளாதாரம் இல்லையென்றால், சுற்றுலாப் பயணிகள் மூலம் எங்களால் பணம் சம்பாதிக்க முடியாது, ”என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் விமான நிலையங்களுக்கு வந்தவுடன் வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் பிற இடங்களைப் பார்வையிட முன்பதிவு செய்து பணம் செலுத்தும் வகையில் ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.