மண்வெட்டியால் தாக்கி ஒருவர் பலி

கம்பஹா – வெயாங்கொடை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மண் வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கெமுனு மாவத்தை, பத்தலகெதர, வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மகளை திருமணம் செய்யவிருந்த நபரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபரும் காயமடைந்து பொலிஸாரின் பாதுகாப்பில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெயாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்