மண்மேடொன்று சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி

பண்டாரவளை- பல்லகெட்டுவ பகுதியில் நேற்றைய தினம் திங்கட் கிழமை மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது மண்மேடு சரிந்துள்ளது. குறித்த மண் மேட்டினுள் காணப்பட்ட கல் ஒன்று தலைப்பகுதியில் வீழ்ந்தமையினால் குறித்த நபர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.