மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணி முதல் நாளை சனிக்கிழமை மாலை 4:00 மணி வரை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல
காலி மாவட்டம்: நெலுவ
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
கண்டி மாவட்டம்: தொலுவ, உடுநுவர, தெல்தோட்டை
கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, ரம்புக்கனை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, ருவான்வெல்ல
குருநாகல் மாவட்டம்: அலவ்வ, ரிதீயகம
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, பல்லேபொல, ரத்தொட, உக்குவெல, யடவத்த மொனராகலை மாவட்டம்: மெதகம
நுவரெலியா மாவட்டம்: ஹங்குரங்கேத்த, அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, கலவான, எஹலியகொடை