மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட முதல் தர பாடசாலைகளில் ஒன்றான மட்/புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையிலும் இந் நிகழ்வானது அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் இன்று இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் ஆலோசகர் மருத்துவர் வி.தேவகாந்தன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி ஆலோசகர் ஜமுனா இந்திரகுமார் மற்றும் சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் பழைய மாணவர் செயலாளர், அபிவிருத்தி சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 100 மாணவர்கள் தரம் 02 மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு மலர் செண்டுகள் கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்