மட்டு.பொண்டுகள் சேனையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தரொருவர் பலி

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுட்பட்ட பொண்டுகள்சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

கிரான் புலி பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா (வயது – 60) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பூலாக்காடு பகுதியிலுள்ள கோயிலுக்கு நேற்று திங்கட்கிழமை அதிகாலை துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளையில் பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியதில் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்குரிய திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்திசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை இன்று செவ்வாய்க் கிழமை  நிறைவடைந்ததையடுத்து சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இம்மாதம் இரண்டு குடும்பஸ்த்தர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்