மட்டு. சிவமுத்து மாரியம்மன் ஆலய காவடி மற்றும் தீ மிதிப்பு உற்சவம்
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உட்சவத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு டச்பார் வங்களாவடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பக்த அடியார்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி, பால்காவடி மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக நள்ளிரவு 1 மணியளவில் வந்தடைந்தனர்.
அதன் பின்னர் அதிகாலை 5 மணியளவில் தீ மிதிப்பு இடம்பெற்றது. இதில் பெண்கள், சிறுவர்கள் முதல் அனைவரும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொண்டனர். தொடர்ந்து சாட்டையடி வழங்கப்பட்டு குறித்த தீ மிதிப்பு நிறைவடைந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்