மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வீட்டிலிருந்து நேற்று சனிக்கிழமை மாலை வகுப்பிற்கு செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்ற மாணவர்களே இவ்வாறு கொக்குவில் சவுக்கடி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன் (வயது-16) மற்றும் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (வயது-16) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.யூ.அப்துல் ஹக்கீம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு மரண விசாரணையினை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்