மட்டு. காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு

-அலுவலக செய்தியாளர்- ஆ.சிறி

காத்தான்குடியில் பூநொச்சிமுனை பகுதியில் கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இனம் தெரியாதோரால் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகிலுள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆ பள்ளி வீதியில் உள்ள வடிகானுக்கு அருகில் கைக்குண்டு ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதந்து குறித்த கைக்குண்டை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்