மட்டு.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி
மட்டு.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி
-ஆர்.நிரோசன்-
மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தயாலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.
இப்போட்டியானது மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபர் எஸ். கணேசரத்தினம் தலைமையில் இடம் பெற்றது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய (திட்டமிடல்) பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சி.சுபாகரன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார, கௌரவ அதிதிகள் மண்மனை வடக்குப்பிரதேச கல்வி அதிகாரி திருமதி.எஸ்.ரவிச்சந்திரா, மட்டக்களப்பு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.அன்புராஜ் , பாடசாலையின் மேம்பாட்டு திட்டமிட இணைப்பாளர் வினைப்பாளர் எஸ்.சிவகுமார் மற்றும் தொழில் அதிபர்கள் என். ரகுநாதன், எஸ்.ஸ்ரீபிரகலாதன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, கராத்தே தற்காப்பு, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தது.
இவ் விளையாட்டு போட்டியில் மஞ்சள் நிற காவேரி இல்லம் 439 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், நீல நிற கங்கை இல்லம் 351 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், பச்சை நிற ஜமுனை இல்லம் 350 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இதன் போது, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களும், பழைய மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.