மட்டு ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் மட்டு.ஊடகவியலாளர்களுக்கான “நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் புரிந்துகொள்ளுதல், கருத்துச் சுதந்திரம், உரிமைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகள்” தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இதன் போது நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது. மேலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சிறந்த விளங்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்ட ஆலோசகர் அஸ்வினி நடேசன் வளவாளராக கலந்து கொண்டார்.