மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது
மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது
கொழும்பில் மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமித்புர பிரதேசத்தில் வெளிநாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மட்டக்குளி பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 12 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.