
மட்டக்களப்பு விபத்தில் 21வயது இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு விபத்தில் 21வயது இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு ஆரையம்பதி 5ஆம் கட்டைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 5ஆம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள சந்தியில் நேற்றிரவு 10மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் புதிய காத்தான்குடி 06 ஆலிம் வீதி தோணா சந்தியைச் சேர்ந்த அப்துஸ்லாம் அப்துல்லாஹ் (வயது -21) இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வேனும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த வேனில் அக்கரைப்பற்றை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.