மட்டக்களப்பு வாவியில் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாவியில் (புதுப்பாலம்) நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க இனங்கானப்படாத குறித்த ஆணின் சடலத்தினை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களிடம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் உதவி கோருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரும், மட்டக்களப்பு மாவட்ட தடையவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்