
வாழைச்சேனையில் விபத்து: உழவு இயந்திரத்தின் சாரதி பலி
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு ஓட்டமாவடி நாவலடி , கொழும்பு பிரதான வீதியில்இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
டிப்பர் வண்டி ஒன்றும் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.