மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறுகின்றது

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்
ஆரம்ப போட்டி நிகழ்வு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது

மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பத்மநாபா ஞாபகார்த்த அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகம் 32 கால்பந்தாட்ட அணிகளுடன் மாபெரும் கால்பந்தாட்ட சுற்று போட்டியை நடத்துகின்றது

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதல் போட்டியில் மட்டக்களப்பு சன் பிலவர் கழக அணியினரும் ரட்ணம் கழக அணியினரும் மோதிக்கொண்டனர்

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் தலைவர் பாலராஜா செல்வராஜா, தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மா.உதயகுமார், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் ஈஸ்வரன், பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் செயலாளர் பத்மராஜா கோபிராஜ், பொருளாளர் த.ரஜினிகாந்த்,   உப தலைவர்களான அசோக்குமார், பரம ராசா, சுற்று போட்டி குழு தலைவர் ரோகினி புவன சிங்கம், மட்டக்களப்பு போக்குவரத்து சேவை முகாமையாளர் க.ஶ்ரீதரன், பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண அனுசரணையாளர்கள் உள்ளிட்ட பாடுமீன் பொழுதுபோக்கு கழகத்தின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்