மட்டக்களப்பு-நாவற்குடா லூர்த்து மாதா ஆலய உற்சவம் நிறைவு!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கலுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவுற்றது.

இதன்போது, ஆலயப் போதகர் கே.ஜேசுதாசன் மற்றும் உதவிப் போதகர் அலஸ் ஆகியோரின் பங்கேற்புடன் இறுதிநாள் பூசைகள் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இக் கொடியிறக்கத்தில் ஆலயப் பங்கு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாலய உற்சவம் இம்மாதம் 5 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்