
மட்டக்களப்பு – திருகோணமலை விதியில் வாகன விபத்து: ஒருவர் மரணம்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் – பெரியபாலம் பகுதியில் இன்று வியாழக்கிழமை விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியான மூதூர் -ஆனைச் சேனையைச் சேர்ந்த 62 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
பெரியபாலம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது பின்னால் பயணித்த சிறிய கெப் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்