மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்தி கௌரவித்து நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் சி. என்.சில்வெஸ்டர் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

முதல் கட்ட நிகழ்வாக தாண்டவன்வெளி அருட்தந்தை ஜூலியன் அவர்களுடைய நற்சிந்தனை இடம்பெற்றதுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிற்பாடு இம்முறையே ஸ்.மு.பிரணித் 142, அ.சர்வித் 142 , றே.ஆகிஸ்149, கி.ஏனோக் ஜெய்சன் 147 , தே.ஜானக்ஷன்140, ச.அக்சா ஆகியோர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சிறந்த முறையில் ஆறு மாணவர்களுமே சித்தியடைந்துள்ளனர்.

அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலையின் பழைய மாணவர்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தரம் 01 இற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதம அதிதியாக பாடசாலையின் முன்னால் அதிபர் ஜே.கே விமல்ராஜ், சிறப்பு அதிதிகளாக அபிவிருத்தி சபையின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்