
மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
எதிர்கால கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில் குறித்த பாடசாலையின் பகுதி தலைவர் மு.யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நீண்ட காலமாக இப் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களின் சித்தி அடைவு மட்டம் குறைவாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அதனை சவாலாக ஏற்றுக் கொண்டு கிண்ணையடி எதிர்கால கல்வி சமூகத்தினர் குறித்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களையும், வகுப்பு மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் இணைத்து ஐந்தாம் தர புலமை பரீச்சை தொடர்பாக கலந்துரையாடி புலம்பெயர் நாட்டில் வாழும் யுவராஜன் நிதி பங்களிப்பில் எதிர்கால கல்வி சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட செயல் திட்டம் வெற்றியளித்துள்ளது.
மேலும் பாடசாலையில் 93 வீதம் சித்திகளை பெற முடிந்ததுடன் நன்கு மாணவர்கள் முதன் முறையாக வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
இந் நிகழ்வில் பாடசாலை பகுதி தலைவர், ஆசிரியர்கள் மற்றும் திருமதி யுவராஜன், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், எதிர்கால கல்வி சமூகத்தின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்