மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் மில்லியன் செலவில் வீதி புனரமைப்பு!! செப்பனிடும் பணிகள் இன்று ஆரம்பம்!!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சுப்பிரமணிய குருக்கள் வீதி , 01 ம் குறுக்கு வீதி இன்றைய தினம் ( திங்கட்கிழமை) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் 130 மீட்டர் கிறவல் வீதி, 04 மில்லியன் செலவில் கொங்கிறீட் விதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்
களுவாஞ்சிக்குடி சுப்பிரமணிய குருக்கள் வீதி , 01 ம் குறுக்கு வீதி இன்றைய தினம் ( 28 ) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் கிறவல் வீதி, கொங்கிறீட் விதியாக செப்பனிடும் நிகழ்விற்கு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், களுவாஞ்சிக்குடி கிராம தலைவர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நீண்ட நாட்களாக கிறவல் வீதியாக காணப்பட்ட வீதியினூடாக , மழைகாலத்தில் பயணம் செய்ய முடியாத நிலையில் , கிராம மக்களால் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன், இவ் வீதியை புனரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததிற்கு நன்றியையும் தெரிவித்தனர்.