
மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஸ்வரா தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் சி.அரசரெட்டிணம் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் எ.அரவிந்தகுமார், கெளரவ அதிதிகள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் சிறப்பு அதிதிகள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் ஜி.அருணன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் ரி.அனந்தரூபன், வாகரை வடக்கு கோட்டகல்வி பணிப்பாளர், பாதுகாப்பு அதிகரிகள்,
ஆசிரியர்கள், பெற்றேர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் வரவேற்பு, கொடியேற்றுதல், மங்கல விளக்கேற்றல், கலை நிகழ்வுகள், நூற்றாண்டு விழா ‘கதிராழி’ சஞ்சிகை வெளியீடு, சேவை நலன் பாராட்டுக்கள், அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன.
இதன்போது பாடசாலையில் சாதாரண, உயர்தர பரீட்சைகள் மற்றும் 5ம் தர புலமை பரீட்சையிலும் சித்தி அடைந்து சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் நினைவு சின்னங்களும், பதக்கங்களும் பாடசாலை நிருவாக்கத்தினரால் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்
அத்துடன் கல்லூரி தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட உதைபந்து, கரப்பந்து, எல்லே மற்றும் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பதக்கங்களும் வெற்றிக்கிண்ணம் என்பன வழங்கப்பட்டன.





