
மட்டக்களப்பு – ஏத்தாலைக்குளத்தில் வலசைப் பறவைகள் வருகை ஆரம்பம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன.
இவ்வாறு வருகை தந்துள்ள பறவைகளில் ஆஸ்திரேலிய வைட் இபிஸ் (Australian White Ibis) என்ற பறவைகளும், நியூசிலாந்து நாட்டு பறவைகளும் காணப்படுகிறது.
குறித்த பறவை இனம் வருடத்தில் டிசம்பர் ஜனவரி, மாதங்களில் ஏத்தாலைக்குளத்தின் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருவதுடன் ஏப்ரல் மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீட்டும் உரிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கே அழகு தரும் குருக்கள்மடம் ஏத்தாலைக் குளம் பறவைகள் சரணாலயத்தை பாதுகாப்பாக பேணுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்