மட்டக்களப்பில் ஆட்டோவில் ஆட்டை திருடிய திருடன் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு நகர் பகுதியான கண்ணகை அம்மன் ஆலைய வீதி நின்ற ஆடு ஒன்றை வாடகை ஆட்டோவில் திருடிக் கொண்டு சென்று காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் வீதியில் ஆட்டோவை விட்டுவிட்டு திருடன் ஆட்டுடன் தப்பி ஓட்டம் ஆட்டோ உரிமையாளரை கைது செய்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதபற்றி தெரியவருவதாவது,

காத்தான்குடியைச் சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் ஒருவர் தனது ஆட்டோவை நாள் வாடகையாக ஆயிரம் ரூபாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ஆட்டோவை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துச் சென்ற நபர் சம்பவதினமான நேற்று பகல் நகரிலுள்ள கண்ணகை அம்மன் ஆலைய பகுதியில் ஆட்டோவில் சென்று அங்கு வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை பிடித்து ஆட்டோவில் திருடிக் கொண்டு கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயததையடுத்து பொலிசார் அந்த பகுதியிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு ஆட்டோவின் இலக்கத்தை கண்டறிந்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்த்தனர்.

இதன்போது உரிமையாளர் தனது ஆட்டோவை வாடகைக்கு வழங்கியதாகவும் இதுவரை ஆட்டோவை திருப்பி கொண்டுவர வில்லை என தெரிவித்து ஆட்டோவை தேடியபோது பள்ளிவால் ஒன்றுக்கு அருகில் வீதியில் ஆட்டோ மற்றம் அதன் ஆவணங்களை கைவிட்டுவிட்டு திருடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ள நிலையில் ஆட்டோ உரிமையாளரை கைது செய்ததுடன் ஆட்டோவை மீட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.