
மட்டக்களப்பில் விபத்து இருவர் படுகாயம் : நிறைபோதையில் சாரதி கைது? – நேரடி வீடியோ இணைப்பு
மட்டக்களப்பில் விபத்து இருவர் படுகாயம் : நிறைபோதையில் சாரதி கைது?
மட்டக்களப்பு கல்லடியில் இன்று புதன்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நிறை மதுபோதையில் லொறியை செலுத்திச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நிறை மதுபோதையில் லொரியை செலுத்திய சாரதியை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த லொறிவண்டி கல்லடியில் பகுதில் ஓரமாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதுண்டதில் ஆண் ஒருவரும் , பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்த ஓரமாக நின்ற கார் ஒன்றின் மீதும் லொறி மோதிவிட்ட தப்பிச் செல்ல முற்பட்ட போது , மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
லொறிச் சாரதி மது அருந்தி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்டையில் உடனடியாகப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் வாகன அனுமதிப்பத்திரம் உட்பட ஏனைய ஆவணங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை, விபத்திற்கு காரணமான லொறி காத்தான்குடி பகுதியைச் சோந்தது என, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை , விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24