மட்டக்களப்பில் வாகன விபத்து: 18 வயது இளைஞன் பலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிர் இழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் களுதாவளை கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியிலேயே நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் உயர்ரக மோட்டார்சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற சமயம் குருக்கள்மடம் பகுதியால் பயணிக்கும் போது முருகன் ஆலயத்தை அண்மித்த பிரதான வீதி வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்சாரத்தூணில் மோதிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

காயமடைந்த இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞரின் சடலமும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்