
மட்டக்களப்பில் மாணவர்களது அநாகரிக செயல்
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் சித்திர பாட ஆசிரியர் பாடசாலை கட்டிட சுவரில் இலங்கை புறவுருவப்படம் ஒன்றை இரவு பகலாக வரைந்துள்ளார். எனினும் அதிகாலையில் அவர் வரைந்த அந்த படத்தை சிலர் ஒயில்கள் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர்.
இவர்களது இந்த செயற்பாடு மோசமான மனித குலத்தின் விருத்தியை காட்டுவதுடன் குறித்த படத்தை வரைந்த ஆசிரியர் மிகவும் வருந்தி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.




