
மட்டக்களப்பில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வழங்கப்பட்டு வந்தமை கண்டுப்பிடிக்கப்ட்டது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோது உணவக பரிசோதனையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள உணவகங்களை சம்பவதினமான நேற்று பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன் போது உணவகத்தின் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்துவந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து விற்பனை செய்த உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
