மட்டக்களப்பில் தெய்வம் ஆடியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு : மற்றொருவர் மீது கத்தி குத்து!

மட்டக்களப்பு ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம்பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததுடன், மற்றொருவர் மீது தெய்வம் ஆடியவர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாளான நேற்று வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்த போது, 37 வயதான ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக்கொண்டிருந்தவர், இன்னொருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கல வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.