மட்டக்களப்பில் சமுர்த்தி உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி – பொறுகாமம் பகுதியிலுள்ள குளக்கரையை அண்டிய நீர்ப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று புதன் கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு பகுதியைச்சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான கிருபைராஜா நிலக்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கிராம சேவகர், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி குளத்திலிருந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்