மட்டக்களப்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்-

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டீனா முரளிதரன் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை   இடம்பெற்றது.

மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சபியானின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தேர்தல்களின்போது பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தெளிவூட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்