மட்டக்களப்பில் இடம்பெற்ற நடன தின விழா

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா நேற்று செவ்வாய்க்கிழமை களுதாவளை கலாச்சார மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பட்டிருப்பு கல்வி வலய நடன ஆசிரிய ஆலோசகர் வனிதா சேகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறிதரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் பிரதி கல்வி பணிப்பாளர்கள் , உதவி கல்வி பணிப்பாளர்கள் , ஆசிரிய ஆலோசகர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது நடன ஆசிரியர்கள் மாணவர்களின் நடன  நிகழ்வுகள் மேடையை அலங்கரித்து.  ஏற்பாட்டு குழுவினால் பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவஞானம் சிறீதரன் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க