
மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவருடன் மட்டக்களப்பு பிரதிநிதிகள் சந்திப்பு!
மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவரான, அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியின் பங்குபற்றலோடு, எதிர்வரும் 11 திகதி அன்று மட்டக்களப்பில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதில் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News 24