மகளை சலவை இயந்திரத்தில் அடைத்து கொலை செய்த தந்தை
மாத்தறை வெலிகம பகுதியில் மகளை சலவை இயந்திரத்தில் அடைத்து தந்தை கொலை செய்துள்ளார்.
திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி பாடசாலையில் செய்த மோசமான செயல்களுக்காக அவரது அம்மா வழக்கம் போல் சிறுமியை தண்டித்துள்ளார். இருப்பினும், இந்த முறை அப்பா மகளுக்கு சிறந்த பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணி சிறுமியை சலவை இயந்திரத்தில் அடைத்துள்ளார்.
இதன்போது குழந்தை சத்தம் போட்டு அழுத போதிலும் தந்தை அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது சிறுமியின் தாய், 9 வயதான மற்றைய மகளுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் கழித்து, திலுஷிகா இயந்திரத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டாார். அப்போது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அப்போது “எங்களுக்கு எதிர்காலத்திலாவது கஷ்டம் வராது” என்று சந்தேகநபரான தந்தை தாயிடம் கூறியுள்ளர்.
எனினும், சிறுமி திலுஷிகா இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக அயலவர்களிடமும் பொலிஸாரிடமும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உயிரிழந்த சிறுமியின் அக்கா தனது தந்தையின் செயல் குறித்து தெரிவித்ததையடுத்து சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்