
போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது
பசறை குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 11 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரையும் , கஞ்சா போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 3 நபர்களுமாக 28,19,18,18 வயதுகளையுடைய நான்கு சந்தேக நபர்களை பசறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீரியபெத்த தொளும்புவத்தை, பசறை 10ஆம் கட்டை, வரதொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை நாளை திங்கடுஇகிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.