போதைப்பொருள் வியாபாரி ஒருவர் அம்பாறையில் கைது
நீண்டகாலமாக போதைப் பொருட்களை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடான துபாய் நாட்டில் இருந்து இயங்கும் போதைப்பொருள் கடத்தல் காரரின் தலைமையில் குறித்த கைதான சந்தேக நபர் செயல்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
தற்போது கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.