போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை, காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை நிறுத்தி மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது 23 வயதுடைய ஏறாவூர் 6 பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருள், 15 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கையானது அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தநாராயணவின் வழிகாட்டுதலில் காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜெகத் தலைமையிலான குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு சம்மாந்துறை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.