போதைப்பொருள் ஒழிப்புக்கு விசேட தேசிய திட்டம் விரைவில்-அமைச்சர் ஆனந்த விஜேபால
திட்டமிட்ட குற்றங்களுக்கும் போதைப் பொருள்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அதன் படிப்படியான பரவல் மூலம் நாட்டின் பிள்ளைகள் அதற்கு பலியாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப சிறந்த மனித வளம் இருக்க வேண்டும்
என்றும் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு இரையாகச் செய்வதன் மூலம் ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழிக்கும் என்றும் சிறைகளில் உள்ள குற்றவாளிகளில் 72% பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர்
என்றும்அந்த எண்ணிக்கை 100% ஆக அதிகரித்தால், சமூகத்தில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால
வலியுறுத்தியுள்ளார் .
நாடு எவ்வளவு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தாலும், நாட்டின் எதிர்கால சந்ததியினர் இந்தப் பேரழிவுக்கு பலியானால், தாம் ஒரு நாடாக வளர்ச்சியடைய முடியாது.
புதிதாகப் பணியமர்த்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 15% முதல் 20% வரை போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும், இதன் விளைவாக, ஜனவரி முதல் 68 அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
இந்தப் பேரிடருக்கு தீர்வாக, அடுத்த 10 முதல் 12 நாள்களுக்குள் ஜனாதிபதியின் தலைமையில் நாட்டில் போதைப்பொருள்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
