போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பிலியந்தலை பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்