போதைக்கு அடிமையான யுவதி எடுத்த விபரீத முடிவு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும், அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி, கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.