
பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை
பொலிஸ் சேவைக்கு தனி சம்பள கட்டமைப்பை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்து 2026 வரவு செலவுத் திட்டத்துக்கான பொருத்தமான திட்டங்களை சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் ளுமன்றத்தில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
தற்போது பணியாற்றும் பொலிஸாருக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான பயிற்சித் திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் .
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும், சில சட்டவிரோத செயல்கள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள பொலிஸ் நிலையங்கள் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்
